வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாக்பூர்:ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தை வெடி குண்டு வைத்து தகர்க்கப்போவதாக வந்த தகவலை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
![]()
|
இது குறித்து போலீஸ் அதிகாரி கோரக் பாம்ரே கூறுகையில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர்கள் மற்றும் அதனை செயலிழக்கும் படை , நாய் படை உள்ளிட்டவற்றை வரவழைத்து ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் முழுவதும் சோதனை இடப்பட்டது. இருப்பினும் சந்தேகத்திற்குறிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
![]()
|
தொடரந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அழைப்பு வந்த போன் நம்பரை கொண்டு மர்ம நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.