மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கை: அண்ணாமலை
மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கை: அண்ணாமலை

மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கை: அண்ணாமலை

Updated : ஜன 03, 2023 | Added : ஜன 02, 2023 | கருத்துகள் (35) | |
Advertisement
சென்னை: மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது என தமிழக பா.ஜ., தலைவர் கூறியுள்ளார்.சென்னை, விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, தி.மு.க., சார்பில் அன்பழகன் நுாற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், எம்.பி.,க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., பிரபாகர ராஜா உள்ளிட்டோர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது என தமிழக பா.ஜ., தலைவர் கூறியுள்ளார்.




latest tamil news


சென்னை, விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, தி.மு.க., சார்பில் அன்பழகன் நுாற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், எம்.பி.,க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., பிரபாகர ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


எம்.பி.,யும், தி.மு.க., மகளிர் அணி பொறுப்பாளருமான கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில், பெண் காவலரிடம், அக்கட்சி பிரமுகர்கள் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை கைது செய்ய முற்பட்ட போலீஸ் சாரிடம், திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம்.



latest tamil news


மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக பார்., உறுப்பினர் கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும், இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது.


இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (35)

baala - coimbatore,இந்தியா
12-ஜன-202312:46:06 IST Report Abuse
baala ஆமாம் அவர்கள் பேசுவார்கள். இவர்கள் செயல் காண்பிப்பார்கள். உங்களுக்கு யாருக்கு வெக்கமே இல்லையா
Rate this:
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
02-ஜன-202321:05:00 IST Report Abuse
T.Senthilsigamani தற்போதைய செய்தி என்ன தெரியுமா ? விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் திமுக பிரமுகர்கள் சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (24), மீது பாலியல் வன்கொடுமை புகாரை பெண்காவலர் அளித்தார் .அவர்கள் கொடுத்த பாலியல் தொல்லை எல்லை மீறியதால் பெண்காவலர் கதறி அழுதார் என்பதுவும் செய்திகளாக முன்பே வந்தது .ஆனால் தற்போது அந்த திமுக பிரமுகர்கள் கைகள் பெண்காவலர் மீது தவறுதலாக ஆமாம் தவறுதலாக பட்டுவிட்டதாக அவர்கள் கூறியதை ஏற்று பெண்காவலர், தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டுவிட்டார் .இதனால் திமுகவின் மீது சுமத்தப்பட்ட களங்கம் பொய் என நிரூபிக்கப்பட்டது .இதன் மூலம் தமிழக பெண்காவலர்கள் அறிய வேண்டிய உண்மை ஓன்று உண்டு .ஆம் இனி நடக்கும் திமுக கூட்டங்களில் தங்களின் மானத்தை காப்பாற்றி கொள்ள திமுக பிரமுகர்கள் கைகளை தூக்கினால் கூட தவறுதலாக தங்களை தொட்டுவிடும் தூரத்தில் இல்லாமல் மிக மிக தொலைவில் நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .இது ஒரு தாழ்மையான எச்சரிக்கை செயலாக கருதவும்
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
02-ஜன-202318:44:45 IST Report Abuse
mindum vasantham அது ரிசல்ட் கண்டிப்பா தெரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X