தினமலர் லோகோ பயன்படுத்தி போலியான பதிவு: சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஏற்பாடு

Updated : ஜன 05, 2023 | Added : ஜன 05, 2023 | கருத்துகள் (64) | |
Advertisement
சென்னை: நேற்று பாஜ தலைவர் அண்ணாமலை கொடுத்த பேட்டி தொடர்பாக, தினமலர் வெளியிடாத ஒரு செய்தியை தினமலர் வெளியிட்டதாகக் கூறி தினமலர் பெயரில் போலியான செய்தி கார்டு உருவாக்கப்பட்டு பரப்பப்படுகிறது.தினமலர் டிஜிட்டலுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான வாசகர்கள் இருக்கின்றனர். எனவே தினமலர் பெயரில் செய்திகளை உருவாக்கினால் அதை மக்கள் நம்புவார்கள்; அந்த தகவலும் வேகமாக
False Registration Using Dinamalar Logo: Provision for Legal Action  தினமலர் லோகோ பயன்படுத்தி போலியான பதிவு: சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: நேற்று பாஜ தலைவர் அண்ணாமலை கொடுத்த பேட்டி தொடர்பாக, தினமலர் வெளியிடாத ஒரு செய்தியை தினமலர் வெளியிட்டதாகக் கூறி தினமலர் பெயரில் போலியான செய்தி கார்டு உருவாக்கப்பட்டு பரப்பப்படுகிறது.


தினமலர் டிஜிட்டலுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான வாசகர்கள் இருக்கின்றனர். எனவே தினமலர் பெயரில் செய்திகளை உருவாக்கினால் அதை மக்கள் நம்புவார்கள்; அந்த தகவலும் வேகமாக பரவும் என சில புல்லுருவிகள் நினைக்கின்றனர். தினமலரின் இந்த புகழை பயன்படுத்தி சிலர் போலியாக தினமலர் பெயரில் செய்தி கார்டுகளையும், மீம்களையும் உருவாக்கி பரப்புகின்றனர்.


சைபர் சட்டப்படி இது பெரிய குற்றம். இங்கே தினமலர் பெயரில் பதிவிடப்பட்டுள்ள பாஜ தலைவர் அண்ணாமலை தொடர்பான 'கார்டை' சிலர் உள்நோக்கத்துடனும் தினமலர் நாளிதழுக்கும், தினமலர் டாட் காம் இணையதளத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மக்கள் மத்தியில் தினமலர் நாளிதழுக்கு உள்ள நற்பெயர் கெடுக்க வேண்டும் என்பதற்காகவும் உருவாக்கி உள்ளனர்.


latest tamil news


தினமலருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள இந்த செயல் ஒரு சைபர் குற்றம். இந்த குற்றம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்யப்பட உள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (64)

Neutrallite - Singapore,சிங்கப்பூர்
09-ஜன-202310:53:31 IST Report Abuse
Neutrallite திருட்டுத்தனமாக செயல், சைபர் போலீஸ் புகார் - நடவடிக்கைள் எடுக்காவிடில் நீதிமன்ற புகார் செய்ய வேண்டும். அதே சமயம் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளவது என்னவெனில், மற்ற ஊடகங்கள் மீது இன்னும் பரவலாக நம்பிக்கை குறைய தொடங்கிவிட்டது. அது திருட்டு கட்சிக்கே புரிந்து விட்டது. திருட்டு ஊடகங்கள் தங்கள் மேல் தானே வாரி இறைத்துக்கொண்டது மண் என்பது புரிய தொடங்கி விட்டது. அதனால் தான் நம்பிக்கைக்குரிய ஊடகத்தின் பெயரை உபயோக படுத்த வேண்டிய கட்டாயம். தினமலரின் நேர்மைக்கு ஒரு சான்று நம்பிக்கையுடன் கொண்ட புத்துணர்ச்சியுடன் இது போன்று பெறுக போகும் செய்திகளை முறியடிக்க ஆவன செய்யுங்கள்.
Rate this:
Cancel
kumaresan - chennai,இந்தியா
06-ஜன-202308:02:49 IST Report Abuse
kumaresan தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிப்பதை விட மத்திய அரசு சைபர் கிரைம் புகார் செய்யலாம்.
Rate this:
Cancel
06-ஜன-202307:58:19 IST Report Abuse
ராசு   சென்னை பொங்கல் தொகுப்பில் நெய் முந்திரி ஏதுவும் இந்த பொங்கலுக்கு திமுக அரசு கொடுக்கவில்லை ~ அதை மக்கள் மறந்துவிட இது போன்று மக்களை திசை மாற்றும் வேலை
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
06-ஜன-202310:11:42 IST Report Abuse
சீனிவிடியல் ஆட்சியில், பல லட்சம் லிட்டர் ஆவின் நெய் காணவில்லைன்னு அண்ணாமலை புகார் கொடுக்க இருக்காராம். ஓசியில முந்திரி கொடுக்காத மந்திரிகளை எந்திரி என மக்கள் சொல்லும் நாள் விரைவில் வரும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X