இளைஞர்கள், விவசாயிகளை பயமுறுத்துவது தான் பா.ஜ., கொள்கை: ராகுல் சாடல்

Updated : ஜன 05, 2023 | Added : ஜன 05, 2023 | கருத்துகள் (26) | |
Advertisement
லக்னோ: இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை பயமுறுத்துவது பாஜகவின் கொள்கை என காங்., எம்.பி ராகுல் கூறியுள்ளார்.கடந்த செப்.,7ம் தேதி, விலைவாசி உயர்வை கண்டித்து, காங்., எம்.பி ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை துவக்கினார். இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், மஹாராஷ்ரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை பயமுறுத்துவது பாஜகவின் கொள்கை என காங்., எம்.பி ராகுல் கூறியுள்ளார்.




latest tamil news


கடந்த செப்.,7ம் தேதி, விலைவாசி உயர்வை கண்டித்து, காங்., எம்.பி ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை துவக்கினார். இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், மஹாராஷ்ரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடந்தது.


தற்போது, உ.பி மாநிலத்தில் காங்., எம்.பி ராகுல் ஷாம்லி மாவட்டத்தில் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, ராகுல் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: ராணுவத்தில் முன்பு இளைஞர்கள் 15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவார்கள்.


அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடிய போது, போராட்டத்தில் கலந்து கொண்ட மாதிரியான புகைப்படத்தை எடுத்தால் உங்களுக்கு அரசு வேலை கிடைக்காது என்று பா.ஜ., கூறியது. இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை பயமுறுத்துவது பாஜகவின் கொள்கை.



latest tamil news


நான் யாத்திரையின் போது டி-சர்ட் அணிந்து செல்கிறேன். பல ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் குழந்தைகள் கிழிந்த ஆடைகளை அணிந்து செல்கின்றனர். ஆனால் குளிர்காலத்தில், அவர்கள் ஏன் ஸ்வெட்டர் அணிந்து செல்லவில்லை என ஊடகங்கள் கேள்வி கேட்கவில்லை.


எனது டி-சர்டில் உள்ள கேள்விகள் முக்கியமான பிரச்சினை அல்ல.

ஆனால் இந்தியாவின் குழந்தைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், குளிர்காலத்திற்கு ஏதுவான ஆடை இல்லாமல் நடப்பது உண்மையான பிரச்சினை ஆகும்.


மக்களிடம் பணவீக்கம் குறித்து கூறுவதை விட்டுவிட்டு, 4 சிறுத்தைகள் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சிறுத்தைகள் காட்டில் சுற்றித் திரிவதாகவும் ஊடகங்கள் செய்தியில் கூறுகின்றது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (26)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜன-202319:33:16 IST Report Abuse
venugopal s பாஜக நீங்கள் சொல்வது போல் பாரபட்சம் காட்டும் கட்சி இல்லை. அவர்கள் எல்லோரையும் எந்த விதமான பாரபட்சமின்றி பயமுறுத்துகின்றனர்.அது தான் உண்மை!
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
05-ஜன-202322:04:23 IST Report Abuse
Priyan Vadanadசார் நீங்கள் சொல்வது மிகவும் சரி. பயத்தில் அடித்தளத்தில் இவர்கள் தங்களது அரசை காட்டுகிறார்கள். பயம் வளரும் இடத்தில் சுதந்திரம் இருக்க முடியாது. நாடு அடுத்த அடிமைத்தனத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-ஜன-202300:07:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்சேகர் ரெட்டி இன்னும் ஹேப்பியா சுத்திக்கிட்டு இருக்கான். கோடிக்கணக்கில் வங்கிப்பணத்தை மோசடி பண்ணிட்டு ஓடிப்போனவன் இன்னும் சிறப்பாக இருக்கான். ஜனநாயக சுதந்திரத்தை பத்தி கேள்வி கேட்டவன் காணாமால் போறான்....
Rate this:
Cancel
05-ஜன-202319:15:26 IST Report Abuse
பேசும் தமிழன் ஊழல் செய்வதன் மூலம ....நாட்டையே பயமுறுத்தியது உங்கள் காங்கிரஸ் ஆட்சி தான் ....பாகிஸ்தான் ஆட்கள் நமது இராணுவ வீரனின் தலையை வெட்டி எடுத்து சென்ற போது கூட ...அதற்கு தக்க பதிலடி கொடுக்க விடாமல் ...நமது இராணுவத்தின் கைகளை கட்டி போட்ட பாவிகள் நீங்கள் ....
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
05-ஜன-202319:08:36 IST Report Abuse
g.s,rajan பயம் ,பயம் ,பயம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X