நிலை தடுமாறிய பயணி - பாய்ந்து காப்பாற்றிய ரயில்வே காவலர்!

Updated : ஜன 06, 2023 | Added : ஜன 06, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
இந்திய ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளது. இதில் பயணி ஒருவர் ரயிலில் ஏற முயலும் போது நிலைதடுமாறி கீழே விழுகிறார். இதைப்பார்த்த ரயில்வே காவலர் ஒருவர் அவரைக் காப்பாற்றுகிறார். இதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. பீகார் மாநிலம், பூர்ணியா ரயில் நிலையத்தில், ரயில் ஒன்று வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அப்போது பயணி ஒருவர்
Dinamalar,Bihar,PurniaRailwayStation,ViralVideo,பீகார், பூர்ணியாரயில்நிலையம், வைரல் வீடியோ,

இந்திய ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளது. இதில் பயணி ஒருவர் ரயிலில் ஏற முயலும் போது நிலைதடுமாறி கீழே விழுகிறார். இதைப்பார்த்த ரயில்வே காவலர் ஒருவர் அவரைக் காப்பாற்றுகிறார். இதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.


latest tamil news

பீகார் மாநிலம், பூர்ணியா ரயில் நிலையத்தில், ரயில் ஒன்று வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அப்போது பயணி ஒருவர் திடீரென ரயிலில் ஏற முற்படும் போது, நிலை தடுமாறி, கீழே விழுந்தார். இதைப்பார்த்த ரயில்வே காவலர் ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில், ஒடி வந்து அவரை காப்பாற்றும் வீடியோ காட்சிகள் ரயில் நிலையத்திலிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்போது இந்த வீடியோவை இந்திய ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளது. அதில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, இதேபோல் பயணிகள் ஓடும் ரயிலில் ஏறவே, இறங்கவோ வேண்டாம் எனப் கேட்டுக்கொண்ட்டுள்ளது. மேலும் பயணியைக் காப்பாற்றிய பாதுகாப்பு வீரருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

Nsnatarajan Iyer - Bangalore,இந்தியா
06-ஜன-202318:45:30 IST Report Abuse
Nsnatarajan Iyer paaraattukkal
Rate this:
Cancel
கழுகுப் பார்வை - chennai,இந்தியா
06-ஜன-202317:33:23 IST Report Abuse
கழுகுப் பார்வை அங்கு ஒருத்தன் பாக்கெட்டில் கை வைத்து வேடிக்கை பார்க்கிறான் எந்தவித சொரனையின்றி.. இம்மாதிரி ஜென்மங்களும் உள்ளன..
Rate this:
pandi - Chicago,யூ.எஸ்.ஏ
07-ஜன-202303:41:37 IST Report Abuse
pandiவேடிக்கை பார்ப்பதை தொடர்ந்தார்...
Rate this:
Cancel
Nepoliyan -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜன-202316:58:56 IST Report Abuse
Nepoliyan இதே போல் கடந்த 10 நாட்களுக்கு முன் வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் ஒரு பெண் ரயிலில் இருந்து இறங்கும் போது நிலை தடுமாறி ரயில் ஓடு பாதையில் விழுந்து இறந்து போனார் அவர் நிலை தடுமாறிய இடத்தின் மிக மிக அருகில் இரயில்வே காவலர் நின்று கொண்டிருந்தார். ஏன் காப்பாற்றவில்லை என கேள்வி வினவ வில்லை. இறந்த பெண் உடலை தூக்க முடியாமல் கணவர் உதவி கேட்டு காவலர் காலில் விழுந்தார் உதவ வில்லை. இதை ஏன் யாரும் பகிரவில்லை?
Rate this:
அருணாசலம், சென்னைஅது சரி. அதை நெப்போலியன் ஏன் பகிரவில்லை ? புகார் ஏதாவது கொடுத்தீர்களா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X