சட்டசபைக்கு இதெல்லாம் புதுசு!

Updated : ஜன 11, 2023 | Added : ஜன 10, 2023 | கருத்துகள் (76) | |
Advertisement
சட்டசபையில் நேற்று கவர்னர் உரையாற்றி முடித்த பின், அவர் பேசிய சில கருத்துக்கள், சபைக் குறிப்பில் இடம் பெற வேண்டாம் என்றும், அவர் உரையில் படிக்காமல் விட்ட விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்றும், முதல்வரின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதுவே முதன்முறை.சபையில் இருக்கும்போதே, தன் பேச்சுக்கு எதிராக, முதல்வர் தீர்மானம் கொண்டு வந்ததால், அவமானமாக கருதி, கவர்னர் கோபமாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சட்டசபையில் நேற்று கவர்னர் உரையாற்றி முடித்த பின், அவர் பேசிய சில கருத்துக்கள், சபைக் குறிப்பில் இடம் பெற வேண்டாம் என்றும், அவர் உரையில் படிக்காமல் விட்ட விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்றும், முதல்வரின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதுவே முதன்முறை.



latest tamil news

சபையில் இருக்கும்போதே, தன் பேச்சுக்கு எதிராக, முதல்வர் தீர்மானம் கொண்டு வந்ததால், அவமானமாக கருதி, கவர்னர் கோபமாக வெளியேறியதும் முதன்முறை.


கவர்னர் சபைக்கு வரும்போதும், அவர் வெளியில் செல்லும்போதும், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் எழுந்து நிற்பது வழக்கம். நேற்று கவர்னர் ரவி வெளியேறியபோது, அமைச்சர்கள் உட்பட பலர் எழுந்திருக்காததும் இதுவே முதன்முறை.


latest tamil news

கவர்னர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது வழக்கமானது. நேற்று, ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகள், கவர்னர் உரையை புறக்கணித்தன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் அமர்ந்திருந்தனர்.


கவர்னர் வெளியேறியபோது, அவருக்கு எதிராக ஆளுங் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து கோஷமிட்டதும், இதுவே முதன்முறை.


கவர்னர் வெளியே சென்றபோது, அவருடன் சபாநாயகர், சட்டசபை செயலர் செல்லாததும் முதன் முறை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (76)

Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
11-ஜன-202310:38:26 IST Report Abuse
Palanisamy T திராவிட "மாடல்" என்கின்றார்கள். திராவிடம் என்பது வரலாற்றுச் சொல். தமிழர் நாகரீகத்த்தோடு இணைந்தச் சொல். இங்கே மாடல் என்றச் சொல்லை பயன் படுத்தியுள்ளார்கள் அது எந்த மொழிச் சொல். மலையாளாச் சொல்லா, கன்னடச் சொல்லா, தெலுங்கு மொழிச் சொல்லா சமஸ்கிருதச் சொல்லா தமிழ்ச்சொல்லா அல்லது மற்ற மாநிலங்களின் மொழிச் சொல்லா? ஆளும் கட்சியை ஆதரித்து பேசுபவர்கள் யாராவது சொல்வார்களா? பதிலுக்காக நாம் அனைவரும் காத்துக் கிடப்போம் பிறமொழிகளை பயன்படுத்துவது தவறென்று என்றும் சொல்லமாட்டேன். நன்றி.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-ஜன-202304:23:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தமிழ்நாட்டின் சட்டசபைக்கு வேண்டுமானால் இது புதுசாக இருக்கலாம். ஆனால் ஆர்என் ரவிக்கு இந்த மாதிரி ஆளும்கட்சி எதிர்ப்பு ஒன்றும் புதுசில்லை. நாகாலாந்தில் பாஜாக்கா-ஆளும்கட்சி கூட்டணியினர் தான் ரவியை திரும்பப் பெறச் சொல்லி விரட்டினார்கள். அங்கேயிருந்து தூக்கியடிக்கப்பட்டவர் தான் இவர்.
Rate this:
Cancel
Jai -  ( Posted via: Dinamalar Android App )
10-ஜன-202319:38:40 IST Report Abuse
Jai வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சிந்தித்து மத்தியில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பதை எல்லாம் யோசித்து ஓட்டு போட வேண்டும். மறுபடியும் மாநில கட்சிக்கு ஓட்டுக்களை வாரி இறைத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் போய்விடும். தற்போது நடந்த நாடகம் போல் பாராளுமன்றத்தில் ஏதாவது ஒரு நாடகம் நடத்துவார்கள் அது அவர்கள் கட்சிக்கு பிரயோஜனமாக இருக்கலாம் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X