'மக்கள் நலனுக்காக கவர்னரும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும்'

Updated : ஜன 11, 2023 | Added : ஜன 11, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
கோவை: தமிழக மக்களின் நலன் கருதி கவர்னரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும், என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.பசுமைத்தாயகம் சார்பில், 'நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம்' என்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, நேற்றிரவு கோவை விமான நிலையம் வந்த பா.ம.க., தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:நொய்யல் ஆறு, 40 ஆண்டுகளாக திட, ரசாயனம், சாயக்கழிவு, ஆக்கிரமிப்பு, மணல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: தமிழக மக்களின் நலன் கருதி கவர்னரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும், என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
பசுமைத்தாயகம் சார்பில், 'நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம்' என்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, நேற்றிரவு கோவை விமான நிலையம் வந்த பா.ம.க., தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:



latest tamil news



நொய்யல் ஆறு, 40 ஆண்டுகளாக திட, ரசாயனம், சாயக்கழிவு, ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை போன்றவைகளால் சீரழிந்துள்ளது. மக்களை திரட்டி நொய்யலை மீட்டெடுக்க முயற்சி எடுப்போம். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளை முதலில் மீட்டெடுக்க வேண்டும்.
நொய்யல் ஆற்றை சீரமைக்க பல ஆயிரம் கோடி ரூபாய் தேவை. எதிர்காலத்தில் ஏற்பட உள்ள காலநிலை மாற்றங்களை தவிர்க்க, இதை சீரமைப்பது மிகவும் அவசியம்.

கூவத்தை சுத்தம் செய்ய இரு அரசுகளும், 4,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. ஆனால், கூவம் இன்னும் அப்படியே தான் உள்ளது. முன்பு துார்வார ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கினால், 10 லட்சம் ரூபாயை மட்டுமே செலவிட்டனர்.


latest tamil news



தமிழக மக்களின் நலன் கருதி கவர்னரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும். கவர்னர் அரசியலில் ஈடுபடக் கூடாது. அரசும், கவர்னரின் செயல்பாடுகளில் தலையிடக்கூடாது. தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. அதைப்பற்றி கவலைப்படாமல், தமிழகமா, தமிழ்நாடா என்ற விவாதம் தேவையற்றது.
பா.ம.க., தலைமையில், 2026ம் ஆண்டு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

12-ஜன-202307:50:29 IST Report Abuse
பேசும் தமிழன் நீங்களே தமிழகம் என்று தான் கூறுகிறீர்கள்... அப்போ ஆளுநர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது???
Rate this:
Cancel
12-ஜன-202305:49:37 IST Report Abuse
பேசும் தமிழன் கவர்னர் தமிழ்நாடு என்று கூறாமல் தமிழகம் என்று கூறி விட்டார் என்று நேற்று கோஷம் போட்ட அன்புமணி ராமதாஸ் இன்று கூறுகிறார் ..."தமிழக" மக்கள் நலன் கருதி....மக்களே நன்றாக கவனியுங்கள் தமிழ்நாடு மக்கள் நலன் கருதி என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்....நீங்களே அப்படி தான் சொல்கிறீர்கள் ...ஆனால் ஆளுநர் தமிழகம் என்று சொன்னது உங்களுக்கு தவறாக தெரிகிறது...திமுக .கூட்டணிக்கு மாற வேண்டும் என்றால் போக வேண்டியது தானே...அதற்கு ஏன் இந்த பில்டப் ???
Rate this:
Cancel
11-ஜன-202319:57:21 IST Report Abuse
ராஜா அதை கூடி கோஷம் போடும்போது சொல்லியிருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X