கடலுார் : தீராத வயிற்று வலியால் மனமுடைந்த கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
கடலுார் அடுத்த குட்டியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜாராம் மகன் ராஜசேகரன் 22; விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. கடந்த 5ம் தேதி வலி அதிகமானதால், மனமுடைந்த ராஜசேகரன், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீக்காயமடைந்த அவரை, புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.