சாலை பள்ளத்தில் படுத்து முதியோர் நுாதன போராட்டம்

Added : ஜன 12, 2023 | |
Advertisement
குரோம்பேட்டை, :குரோம்பேட்டை, எம்.ஐ.டி., மேம்பால அணுகு சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதை கண்டித்து, பள்ளத்தில் படுத்து முதியோர்கள் போராட்டம் நடத்தினர்.குரோம்பேட்டை எம்.ஐ.டி., மேம்பாலத்தில், நியூ காலனியை ஒட்டி அணுகு சாலை உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அணுகுசாலையை பயன்படுத்துகின்றனர். லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில்,
 சாலை பள்ளத்தில் படுத்து முதியோர் நுாதன போராட்டம்



குரோம்பேட்டை, :குரோம்பேட்டை, எம்.ஐ.டி., மேம்பால அணுகு சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதை கண்டித்து, பள்ளத்தில் படுத்து முதியோர்கள் போராட்டம் நடத்தினர்.

குரோம்பேட்டை எம்.ஐ.டி., மேம்பாலத்தில், நியூ காலனியை ஒட்டி அணுகு சாலை உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அணுகுசாலையை பயன்படுத்துகின்றனர். லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில், அடிக்கடி பள்ளம் தோண்டுவதும், அதை முறையாக மூடாததும் தொடர்கிறது.

இதனால், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக சாலை மாறிவிட்டது. இதில் செல்லும் முதியவர்களும், மாணவர்களும் பள்ளத்தில் தவறி விழுந்து அடிபடுகின்றனர்.

இப்பிரச்னை குறித்து, பல முறை புகார் தெரிவித்தும், சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வராமல், அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதனால், நாள்தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், போக்கு வரத்துக்கு லாயக்கற்றநிலையில் உள்ள சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து, குரோம்பேட்டையை சேர்ந்த மூத்த குடிமக்கள், நேற்று காலை, சாலையில் உள்ள பள்ளத்தில் படுத்து போராட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X