மதுரை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணியர் வசதிக்காக நாளை முதல் ஜன., 18 வரை திண்டுக்கல் -- கோவை இடையே, முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
இதன்படி கோவை -- திண்டுக்கல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், 06077 கோவையில் இருந்து காலை 9:20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:00 மணிக்கு திண்டுக்கல் வந்துசேரும்.
மறு மார்க்கத்தில் திண்டுக்கல் -- கோவை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில், 06078 திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு கோவை சென்று சேரும்.
இந்த ரயில்கள் அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழநி, புஷ்பத்துார், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.