The municipal office was besieged by jackals | நகராட்சி அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகை| Dinamalar

நகராட்சி அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகை

Added : ஜன 12, 2023 | |
புதுச்சேரி : புதுச்சேரி நகராட்சி ஆணையர் அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் நரிக்குறவர்கள் பலுான் மற்றும் பொம்மை உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று கடற்கரையில் ஆய்விற்கு சென்ற புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள், நரிக்குறவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த பலுான்
The municipal office was besieged by jackals   நகராட்சி அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகை



புதுச்சேரி : புதுச்சேரி நகராட்சி ஆணையர் அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் நரிக்குறவர்கள் பலுான் மற்றும் பொம்மை உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கடற்கரையில் ஆய்விற்கு சென்ற புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள், நரிக்குறவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த பலுான் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதனைக் கண்டித்து நரிக்குறவர்கள், காலை 11.30 மணிக்கு கம்பன் கலையரங்கில் உள்ள புதுச்சேரி நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, பறிமுதல் செய்த பொருட்களை திரும்ப வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கம்யூ., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் கம்யூ., கட்சியினர் ஆணையர் சிவக்குமாரை சந்தித்து பேசினர். அதன் பிறகு பறிமுதல் செய்த விளையாட்டு பொருட்கள் மீண்டும் நரிக்குறவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X