விழுப்புரம் : மாஜி சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கு விசாரணை, வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, மாஜி சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கில், தற்போது சாட்சி விசாரணை நடக்கிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது, மாஜி சிறப்பு டி.ஜி.பி., மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 20 தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.