Sexual intercourse Adolescent genital warts | கள்ளத் தொடர்பு வாலிபருக்கு அந்தரங்க உறுப்பில் சூடுவைப்பு| Dinamalar

கள்ளத் தொடர்பு வாலிபருக்கு அந்தரங்க உறுப்பில் சூடுவைப்பு

Added : ஜன 12, 2023 | |
கச்சிராயபாளையம் : கள்ளக்குறிச்சி அருகே, பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த இளைஞரை தாக்கி, அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த காரனுாரைச் சேர்ந்த முனியப்பிள்ளை மகன் பூவரசன்,21; திருமணமாகாதவர். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது.இது பெண்ணின்

கச்சிராயபாளையம் : கள்ளக்குறிச்சி அருகே, பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த இளைஞரை தாக்கி, அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த காரனுாரைச் சேர்ந்த முனியப்பிள்ளை மகன் பூவரசன்,21; திருமணமாகாதவர். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது.

இது பெண்ணின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. கடந்த 8ம் தேதி காலை 11.௦௦ மணியளவில் அப்பெண் வீட்டிற்கு பூவரசன் சென்றுள்ளார்.

இதனை கண்காணித்த பெண்ணின் உறவினர்கள்அஜித்குமார், தமிழ்செல்வன், மேலபழங்கூர் ராம்குமர் ஆகியோர் பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்று, பூவரசனை பிடித்து தாக்கினர்.

தொடர்ந்து, பூவரசனை நிர்வாணப்படுத்தி வாயில் துணியை வைத்து அடைத்து, காஸ் அடுப்பில் தண்ணீர் குடிக்கும் சொம்பை சூடேற்றி அவரது அந்தரங்க உறுப்பு மற்றும் பின் பகுதியில் சூடு வைத்துள்ளனர். இதில் காயமடைந்த பூவரசன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பூவரசன் கொடுத்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் அஜித்குமார், தமிழ்செல்வன், ராம்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X