நாட்டு வெடிகுண்டுகளுடன் நெய்வேலியில் 4 பேர் சிக்கினர்

Added : ஜன 12, 2023 | |
Advertisement
நெய்வேலி : நெய்வேலியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றிய நான்கு பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், நெய்வேலி வட்டம் - 21ல் நாட்டு வெடிகுண்டுகளுடன் மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.அதையடுத்து, தகவல் கூறப்பட்ட இடத்திற்கு நேற்று விரைந்து சென்ற டெல்டா போலீசார், அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 4 பேரை மடக்கிப்



நெய்வேலி : நெய்வேலியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றிய நான்கு பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி வட்டம் - 21ல் நாட்டு வெடிகுண்டுகளுடன் மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து, தகவல் கூறப்பட்ட இடத்திற்கு நேற்று விரைந்து சென்ற டெல்டா போலீசார், அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 4 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்ததில், நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்ததில், பிடிபட்ட நபர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என, தெரிய வந்தது.

மேலும் 7 பேருக்கு இவர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வெடி குண்டுகளுடன் பதுங்கி இருந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X