கவர்னர் மாளிகையில் இன்று பொங்கல் விழா; 1,800 பேருக்கு அழைப்பு

Added : ஜன 12, 2023 | கருத்துகள் (47) | |
Advertisement
சென்னை: கவர்னர் மாளிகையில், இன்று(ஜன.,12) நடக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்க, முதல் முறையாக விவசாயிகள், அனைத்து மதத் தலைவர்கள் என, 1,800க்கும் மேற்பட்டோருக்கு, அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.கவர்னர் மாளிகையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடக்கும். இவ்விழாவில் பங்கேற்க, முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோருக்கு
Governor,RN Ravi,Pongal,Ravi,ரவி,ஆளுநர்,கவர்னர்,பொங்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: கவர்னர் மாளிகையில், இன்று(ஜன.,12) நடக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்க, முதல் முறையாக விவசாயிகள், அனைத்து மதத் தலைவர்கள் என, 1,800க்கும் மேற்பட்டோருக்கு, அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

கவர்னர் மாளிகையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடக்கும். இவ்விழாவில் பங்கேற்க, முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும்.

இம்முறை முதல் முறையாக, கவர்னர் ரவி உத்தரவின்படி, ஆதீனங்கள், கிறிஸ்தவ பிஷப்புகள், முஸ்லிம் மத குருமார்கள், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர், வீராங்கனையர், விவசாயிகள், தமிழ் ஆர்வலர்கள், சமூக வலைதள பிரபலங்கள், பழங்குடியின மாணவர்கள், சிறப்பாசிரியர்கள், பிரதமரின் 'மங்கிபாத்' நிகழ்ச்சியில், பிரதமரால் பாராட்டப் பட்டவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் போன்றோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.


latest tamil news

இதுதவிர வழக்கம்போல், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரமுகர்கள் என, 1,800க்கும் மேற்பட்டோர் விழாவுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். விழா இன்று மாலை, 5:00 மணிக்கு, கவர்னர் மாளிகையில் துவங்குகிறது.

விழாவில், கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என, தமிழகத்தின் கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. உடல் நலம் பேணும், 22 வகையான பாரம்பரிய உணவு வகை விருந்துடன் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (47)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-202319:43:50 IST Report Abuse
venugopal s பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ் பகுதியில் தமிழக ஆளுநர் என்றும் ஆங்கில பகுதியில் தமிழ்நாடு கவர்னர் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளதே, ஏன்? ஒருவேளை ஆளுநர் பயந்து விட்டாரோ?
Rate this:
Cancel
seetha - KRS,நார்வே
12-ஜன-202318:55:00 IST Report Abuse
seetha நல்லவேளை ஆங்கில அச்சில் Governor of Tamil Nadu "தமிழ்நாடு" ன்னு போட்டாங்களே... Governor of Thamizhagam போடாம :)
Rate this:
Cancel
Indian -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-202315:28:30 IST Report Abuse
Indian Governor yenna Ungala maathiri 21m pakka Kazhichada nu ninaichiya ...sattappadi Avarudaya pathavikku undaana Yella Selavum Mathiya arasu kodukkum. Ungala maathiri aduthavan sotha aataya podarathu illa.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X