திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றிய கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, சேர்மன் ஓம்சிவசக்திவேல் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., முபாரக் அலிபேக் முன்னிலை வகித்தார். துணைச் சேர்மன் கோமதி நிர்மல்ராஜ் வரவேற்றார். மேலாளர் பாண்டியன் தீர்மானம் வாசித்தார்.
கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், குடிநீர், சாலை, மின்விளக்கு வசதி உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் பணிகள் மேற்கொள்வது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.