திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஒற்றைச் சாளர தகவல் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்தலிங்கமடம் கிராமத்தை மாதிரி திட்டமாக தேர்வு செய்யப்பட்டுஒற்றைச் சாளரை தகவல் தொழில்நுட்ப மையம் திறக்கப்பட்டது. விழாவிற்கு, தோட்டக்கலை உதவி இயக்குனர் வளர்மதி தலைமை தாங்கினார். தோட்டக்கலை அலுவலர் மீனா வரவேற்றார்.
தோட்டகலை உதவி இயக்குனர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒற்றைச் சாளர தகவல் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்து பேசினார்.
ஊராட்சி தலைவர் கெங்கையம்மாள், உதவி அலுவலர் பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.