திருவான்மியூர், பள்ளிக்கரணை, ராம் நகர், மூன்றாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் தேவநாயகி, 60. இவர் நேற்று, திருவான்மியூரில் இருந்து வீட்டுக்கு வர, பேருந்து பணிமனையின் நின்றார்.
அதன் முகப்பில், தாம்பரத்திற்கு புறப்பட்ட மாநகர பேருந்து, எதிர்பாராதமாக மூதாட்டி மீது மோதியது. இதில், நிலை தடுமாறி விழுந்த தேவநாயகி மீது, பேருந்தின் முன் சக்கரம் ஏறியதில், அதே இடத்திலேயே அவர் இறந்தார்.
திருவான்மியூர் போலீசார், மூதாட்டி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிந்த போலீசார், பேருந்து ஓட்டுனரான செங்கல்பட்டைச் சேர்ந்த முருகன், 41, நடத்துனர் ராஜி, 42, ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர்.