அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில்அரசு டவுன் பஸ் மோதியதில் பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார்.
அவலுார்பேட்டை புது காலனியைச் சேர்ந்தவர் முருகன் மகன் மோகன்ராஜ், 19; அதே ஊரைச் சேர்ந்தவர் சிவராமன், 29; நண்பர்கள். இருவரும் மேல்மலையனுாருக்கு பைக்கில் சென்றனர். பைக்கை மோகன்ராஜ் ஓட்டினார்.
அவலுார்பேட்டை சாலையில் சென்றபோது பின்னால் வந்த அரசு டவுன் பஸ் பைக் மீது மோதியது. இதில், மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த சிவராமன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.