பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம்| Nammalwar Moksha Utsavam at Perumal temple | Dinamalar

பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம்

Added : ஜன 12, 2023 | |
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம் உற்சவம் நடந்தது.கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நம்மாழ்வாருக்கு பெருமாள் மோட்சம் அளிக்கும் ஐதீகம் நடத்தப்பட்டது.இதனையொட்டி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம்
 பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம்



கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம் உற்சவம் நடந்தது.

கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நம்மாழ்வாருக்கு பெருமாள் மோட்சம் அளிக்கும் ஐதீகம் நடத்தப்பட்டது.

இதனையொட்டி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்து மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர்.

தொடர்ந்து ஆழ்வார்களும் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டது. நம்மாழ்வாருக்கு பெருமாள் மோட்சம் அளித்த சிறப்பினை பக்தர்களுக்கு தேசிக பட்டர் எடுத்துரைத்தார். சாற்று முறை சேவை பூஜைகளுக்கு பின், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X