உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே குடும்ப தகராறில் கணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த ஆரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சன்னியாசி மகன் மருதமலை, 24; ஜே.சி.பி., டிரைவர். இவரது மனைவி சவுந்தர்யா. இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த மருதமலை பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.
திருநாவாலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.