வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பாசுமதி அரிசியில் கலப்படத்தை தவிர்க்கவும், அதன் தரத்தை உறுதி செய்யவும், பல்வேறு தரக்கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகளை மத்திய அரசு விதித்துள்ளது.
பாசுமதி அரிசி விற்பனையில் அதிக லாப நோக்கத்தில் பல்வேறு கலப்படங்கள் நடப்பதாக புகார்கள் குவிகின்றன. பாசுமதி அரிசியுடன் வேறு வகை தரமற்ற அரிசியை கலப்பது, சில செயற்கை மூலப்பொருட்கள் வாயிலாக அதன் நிறத்தை மாற்றுவது உட்பட பல கலப்பட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பல்வேறு தரக்கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகளை மத்திய அரசு முதல்முறையாக வகுத்துள்ளது. இதன்படி, பாசுமதி அரிசியில் செயற்கை நிறங்கள் மற்றும் மணங்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
![]()
|
இந்த புதிய தரக்கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள் ஆக., 1 முதல் அமலுக்கு வருகிறது.