சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் நேற்று(ஜன.,12) வரை, 2.02 கோடி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை இம்மாதம், 9ம் தேதி முதல் வழங்கி வருகிறது. அவற்றை இன்று வரை வாங்கலாம் என, தெரிவிக்கப்பட்டது.
நேற்று மாலை வரை, 2.02 கோடி கார்டுதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது. ரொக்கமாக மட்டும் தலா, 1,000 ரூபாய் வீதம், 2,020 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும், 17 லட்சம் பேருக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டியுள்ளது. இன்று ரேஷன் கடைகளுக்கு வேலை. எனவே, இதுவரை வாங்காதவர்கள் இன்று கடைகளுக்கு சென்று பரிசு தொகுப்பை வாங்கி கொள்ளலாம்.