விருதுநகர்--விருதுநகர் ஒய்ஸ்மென் சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏழை மாணவர்கள் ஆயிரம் பேருக்கு இலவச புத்தாடை வழங்கினர்.
இதில் ஆவுடையாபுரம் பாலமுருகன் துவக்கப் பள்ளி, வடமலைக்குறிச்சி யூனியன் பிரைமரி, அரசு உயர்நிலை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ரோசல்பட்டி அங்கன்வாடி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
ஒய்ஸ்மென் சங்கத் தலைவர் வாழவந்தான் தலைமை வகித்தார். செயலாளர் விக்னேஷ்குமார், ஞானமணி முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர்கள் ரமேஷ், கண்ணன், கலைசேகரன், தமிழரசி, மணிமேகலை பங்கேற்றனர்.