காளையை பிடிக்க 5399 பேர் முன்பதிவு| 5399 people booked to catch the bull | Dinamalar

காளையை பிடிக்க 5399 பேர் முன்பதிவு

Added : ஜன 13, 2023 | |
மதுரை-மதுரையில் ஜன.,15 முதல் 17 வரை நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுகளை பிடிப்பதற்கான முன்பதிவில் நேற்று மாலை 5:00 மணி வரை 5399 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.ஜன.,15 ல் அவனியாபுரம், 16ல் பாலமேடு, 17ல் அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணைய தளத்தில் ஜன.,10 மதியம் 12:00 முதல் ஜன.,12 மாலை 5:00 மணி வரை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். 3 நாட்களில் 5399 பேர் பதிவு



மதுரை-மதுரையில் ஜன.,15 முதல் 17 வரை நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுகளை பிடிப்பதற்கான முன்பதிவில் நேற்று மாலை 5:00 மணி வரை 5399 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஜன.,15 ல் அவனியாபுரம், 16ல் பாலமேடு, 17ல் அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணைய தளத்தில் ஜன.,10 மதியம் 12:00 முதல் ஜன.,12 மாலை 5:00 மணி வரை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். 3 நாட்களில் 5399 பேர் பதிவு செய்தனர். 9699 பேர் காளைகளை களத்தில் இறக்க முன்பதிவு செய்தனர். பதிவு செய்தவர்களின் சான்று சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்கள் மட்டும் அனுமதி டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X