வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருச்சி: ''தி.மு.க.,வினர், கவர்னர் பற்றி பேசுவதை இதோடு விட்டு விட்டால், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரித்துஉள்ளார்.
திருச்சியில், பா.ஜ., சார்பில், நம்ம ஊர் மோடி பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு,பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று பரிசு வழங்கினார்.
அவர் கூறியதாவது: மூன்று நாட்களாக, பிரிவினைவாத தீய சக்திகள் வேண்டுமென்றே கவர்னரையும், பா.ஜ.,வையும் தாக்கிப் பேசி வருகின்றன. 2019ல் பார்லிமென்ட்தேர்தலுக்கு முன், பா.ஜ.,வுக்கு எதிரான பிம்பத்தை ஏற்படுத்தியது போல், இப்போதும்ஏற்படுத்துகின்றனர்.
தமிழக கவர்னரின்நடவடிக்கைகளில் உள்நோக்கம் எதுவும் இல்லை. மாநில அரசை குறை கூறி, முதல்வருக்கும், அரசுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாமல், நாகரிகமாக, கவர்னர் உரையில்எழுதியிருந்த வாசகங்களைதவிர்த்துள்ளார். அதற்கு, கவர்னருக்கு, முதல்வர் நன்றி தெரிவித்திருக்க வேண்டும்.
ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்கள் கொடுத்த உற்சாகத்தில், வெளிநாட்டு நேரடி முதலீட்டில்,தமிழகம் முதல் மாநிலமாக வந்திருப்பதாக கூறுவது பச்சைப் பொய். கடந்த ஆண்டு தமிழகத்துக்கு, 2.5 மில்லியன் டாலர் அந்நிய முதலீடுவந்துள்ளது.
அதே சமயம், கர்நாடகாவுக்கு, 18 மில்லியன் டாலர், மஹாராஷ்டிராவில், 11.6 மில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு உள்ளன.
![]()
|
ஜன.7ம் தேதியே, என்னால், பொய்யான புகழுரைகளை படிக்க முடியாது என, கவர்னர் சொல்லிஉள்ளார். அப்போது, அரசு தரப்பில், கவர்னர் உரை அச்சுக்கு போய் விட்டதாக தெரிவித்துள்ளனர். 'நீங்கள் தப்பு என்று நினைப்பதை தவிர்க்கலாம்' என்றும், தெரிவித்து உள்ளனர்.
அவசியம் இல்லை
மாநில அரசின் சம்மதத்தோடு தான், அந்த சம்பவம் நடந்துள்ளது. அதனால் தான், பிரச்னை பெரிதாவதை தடுக்க, தி.மு.க.,வினர் கவர்னரை பற்றி பேசக்கூடாது என, தமிழக முதல்வர்அறிவுறுத்தி உள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி போன்ற அநாகரிக பேர்வழிகளுக்கு, அரசியல் சட்டம் தெரிந்திருக்க வேண்டும். 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி தான், ஒரு மாநில அரசை கலைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
குறிப்பிட்ட பகுதியை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர, அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. ஏற்கனவே, அ.தி.மு.க.,வில் இருந்தபோது, கருணாநிதியையும், அவரது குடும்பத்தையும் கேவலமாக சட்டசபையில் பேசிவிட்டு, தற்போது, தி.மு.க.,வில் அமைச்சராக இருக்கும் சேகர்பாபுவை ஏவி விட்டால் என்னாகும் என்று கேட்கிறார் ஆர்.எஸ்.பாரதி.
முதல்வர் பதவிக்கு உலை வைக்க முடிவு செய்து விட்டீர்கள்; இப்போது, சேகர்பாபுவின் அரசியல் வாழ்க்கையையும் முடிக்க நினைத்துவிட்டனர்.
தி.மு.க.,வினர், இந்த விவகாரத்தை இதோடு விட்டு விட்டால், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். எனவே, கவர்னரை பற்றி யாரும் பேச வேண்டாம் என,எச்சரிக்கிறேன்.
தி.மு.க.,வினரின் துாண்டுதலால் தான், கவர்னருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், விவசாய போராட்டம், 'கோ பேக் மோடி' போன்ற பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ஆனால், 303 தொகுதிகளை கைப்பற்றி, மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தார். இவ்வாறு, அவர்தெரிவித்தார்.