காஞ்சிபுரம்:கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களில் தேர்வான 72 கிராமங்களில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த சிறப்பு முகாம், வரும் 19 ம் தேதி மற்றும் பிப்., 9 ஆகிய இரு நாட்களில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ளது.
இச்சிறப்பு முகாமில், அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு, துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே, கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று அரசு திட்டங்களின் பயன்களை பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.