வாலிபருக்கு குண்டாஸ்| Kundas for teenagers | Dinamalar

வாலிபருக்கு 'குண்டாஸ்'

Added : ஜன 13, 2023 | |
மணவாள நகர்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சி, மணவாள நகர் பகுதியில் உள்ள கபிலர் நகரைச் சேர்ந்தவர் சேகர் மகன் பிரவீன், 23.இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அடிதடி, வழிப்பறி வழக்கில் மணவாள நகர் போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரவீனை, குண்டர் தடுப்பு
 வாலிபருக்கு 'குண்டாஸ்'

மணவாள நகர்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சி, மணவாள நகர் பகுதியில் உள்ள கபிலர் நகரைச் சேர்ந்தவர் சேகர் மகன் பிரவீன், 23.

இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அடிதடி, வழிப்பறி வழக்கில் மணவாள நகர் போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரவீனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மணவாள நகர் காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின், எஸ்.பி., பி.சி.கல்யாண் பரிந்துரையின்படி, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, மணவாள நகர் போலீசார் அதற்கான உத்தரவை சென்னை புழல் சிறையில் உள்ள பிரவீனிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X