சிவகாசி,- -சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி வைர விழா, 60 வது விளையாட்டு விழாவை முன்னிட்டு நீண்ட துாரம் ஓடு, நீண்ட ஆயுள் பெற்றிடு என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது.
மாணவர்களுக்கு 12.5 கி.மீ., மாணவிகளுக்கு 5 கி. மீ., துாரம் மினி மாரத்தான் போட்டி நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் துவக்கி வைத்தார். 1410 மாணவர்கள், 1370 மாணவிகள் பங்கேற்றனர். முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.
பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் பால்ஜீவ சிங், உடற் கல்வியியல் துறை தலைவர் ஜான்சன், உடற்கல்வி உதவி இயக்குனர் கவிதா, உடற் கல்வியியல் துறை பேராசிரியர்கள் செய்தனர்.