ஆயத்த ஆடை திறன் கவுன்சில் தலைவராக சக்திவேல் நியமனம்| Sakthivel appointed as Chairman of Readymade Garment Skills Council | Dinamalar

ஆயத்த ஆடை திறன் கவுன்சில் தலைவராக சக்திவேல் நியமனம்

Added : ஜன 14, 2023 | |
திருப்பூர்:ஆயத்த ஆடை ஜவுளி மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் தலைவராக, சக்திவேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற, ஆயத்த ஆடை ஜவுளி மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் செயல்படுகிறது. மத்திய அரசின், திறன் வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோர் உருவாக்கம் அமைச்சகம் சார்பில், இந்த கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.முதல் தலைவராக (2013 -
 ஆயத்த ஆடை திறன் கவுன்சில்  தலைவராக சக்திவேல் நியமனம்

திருப்பூர்:ஆயத்த ஆடை ஜவுளி மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் தலைவராக, சக்திவேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற, ஆயத்த ஆடை ஜவுளி மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் செயல்படுகிறது.

மத்திய அரசின், திறன் வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோர் உருவாக்கம் அமைச்சகம் சார்பில், இந்த கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் தலைவராக (2013 - 2018) இருந்த சக்திவேல், மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், 2025ம் ஆண்டு வரை தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவேல் கூறுகையில், ''ஜவுளி தொழில்முனைவோரை ஒருங்கிணைத்து, வேலை உருவாக்கம் மற்றும் ஆடைத் தொழிலின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கவுன்சில் செயல்படுகிறது.

பிரதமரின் தொலைநோக்கு திட்டம் வெற்றியடையும் வகையில், கவுன்சில் திறமையுடன் செயல்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X