கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், பொருளாளர் சாந்தி, இயக்குனர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி, கல்லுாரி வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் கல்லுாரி தலைவர் சிராஜூதீன், துணை முதல்வர்கள் சக்திவேல், சசிகலா, கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.