நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கம் தொகுதியில் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகையினை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த ஏழை பெண்கள் 39 பேருக்கு தலா ரூ.75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான காசோலை வழங்கும் விழா கரியமாணிக்கம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு, பயனாளிகளுக்கு காசோலை வழங்கினார்.
நிகழ்ச்சியில், துறை இயக்குனர் அசோகன், நல ஆய்வாளர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.