திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார்.
மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் முன்னிலை வகித்தார். கல்லாமை இல்லாமையாக்குவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கைகளில் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் மாணவர்களை வழிநடத்திச் சென்றார். புதிய பாரத திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர்கள் சரளா, ரோசாலிபாய், விஜயகுமார், முரளி, கலியபெருமாள், ஜெயபாலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.