திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் மருத்துவமனைக்குச் சென்ற மகளைக் காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
திருக்கோவிலுார் அடுத்த சோழவண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் மகள் நந்தினி, 22; பி.எஸ்சி., பட்டதாரி. இவர், கடந்த 9ம் தேதி தனது அக்கா சுகன்யாவுடன் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். பாத்ரூம் சென்று வருவதாக அக்காவிடம் கூறிச் சென்ற நந்தினி திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.