காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே. பொறியியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த விழவை, கல்லுாரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பொறியியல் கல்லுாரி முதல்வர் ஆனந்தவேலு, நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாத், மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் வெங்கடேசன். துணை முதல்வர் அறிவழகன், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவியர் பங்கேற்றனர்.