வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக, தேர்தல் ஆணையத்திற்கு, அதிமுக.,வின் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பார்லிமென்ட், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ' ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக ஆய்வு செய்யும்படி, தேசிய சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது. அதன்படி, அரசியல்கட்சிகளிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்கிறது.
அந்த வகையில் அரசியல் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. பழனிசாமிக்கு அதிமுக.,வின் இடைக்கால பொது செயலாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பி இருந்தது. இந்த கடிதத்திற்கு 16 ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சட்ட ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், இந்த கடிதத்திற்கு பதில் அளித்து பழனிசாமி அனுப்பி உள்ள கடிதத்தில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பதற்கு அ.தி.மு.க., ஆதரவு அளிக்கும் என்கூறியுள்ளார்.