ரத்த தானம் வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவர்| A differently-abled student who donated blood | Dinamalar

ரத்த தானம் வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவர்

Added : ஜன 15, 2023 | |
அருப்புக்கோட்டை,-அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக ரத்த தான முகாம் நடந்தது. இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர்.தோணுகாலை சேர்ந்த நவீன்குமார் தேவாங்கர் கலை கல்லூரியில் பி.ஏ., 3 ம் ஆண்டு படிக்கிறார். இவர் தானாக முன்வந்து ரத்த தானம் வழங்கினார். நான் பலருடைய உதவியால் தான் கல்லூரி வரை படித்து வருகின்றேன்.என்னால்



அருப்புக்கோட்டை,-அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக ரத்த தான முகாம் நடந்தது. இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர்.

தோணுகாலை சேர்ந்த நவீன்குமார் தேவாங்கர் கலை கல்லூரியில் பி.ஏ., 3 ம் ஆண்டு படிக்கிறார். இவர் தானாக முன்வந்து ரத்த தானம் வழங்கினார். நான் பலருடைய உதவியால் தான் கல்லூரி வரை படித்து வருகின்றேன்.

என்னால் முடிந்தது ரத்த தானம் செய்வது என நினைத்து முதல்முறையாக ரத்த தானம் செய்துள்ளேன் என மாணவர் கூறினார். மாணவரை சங்க நிர்வாகிகள் இன்னாசி ராஜா, சரவணசெல்வன், சங்கரநாராயணன், பாலாஜி, குணவதி பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X