ஊத்துக்கோட்டை--ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள மஹா கால பைரவர் கோவிலில் ஒவ்வொரு மாதமும், வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி விழா கொண்டாடுவது வழக்கம்.
இந்தாண்டின் முதல் தேய்பிறை அஷ்டமி விழா, நேற்று முன்தினம் நடந்தது. காலை 10:00 மணிக்கு மூலவருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
பின் சிறப்பு அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, யாக சாலை அமைத்து சிறப்பு பூஜை நடந்தது.