சென்னை-தமிழகம், புதுச்சேரியில் கூடுதல் 'நீட்' தேர்வு மையங்களை அமைக்குமாறு, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்திஉள்ளார்.
அவரது அறிக்கை:
முதுநிலை மருத்துவ படிப்புக்காக, மார்ச் 5-ல் நடக்கவுள்ள 'நீட்' தேர்வுக்காக தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் நிரம்பி விட்டன.
நீட் தேர்வுக்கான விண்ணப்பம், கடந்த 7-ம் தேதி துவங்கினாலும், அதற்கான தகுதிகள் கடந்த 13-ம் தேதி தளர்த்தப்பட்டதால், அதன்பின் தான் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் அதிகம் விண்ணப்பித்தனர். வாய்ப்பு மறுக்கப்படுவதால், அவர்கள் வெளி மாநிலங்களில் நீட் எழுதும் நிலை உருவாகிஉள்ளது.
வெகுதொலைவு பயணித்து, தேர்வு எழுதுவது மன உளைச்சலை ஏற்படுத்தும். அது தேர்வு செயல்பாட்டை பாதிக்கும்.
தமிழகம், புதுச்சேரியில் அதிக மருத்துவ கல்லுாரிகள் உள்ள நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் அதிக தேர்வு மையங்களை அமைத்திருக்க வேண்டும்.
தேசிய தேர்வு முகமை செய்த தவறால், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது. எனவே, தமிழகம், புதுச்சேரியில் கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.