ஆயுத தரகர் சஞ்சய் பண்டாரியை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அனுமதி

Updated : ஜன 17, 2023 | Added : ஜன 17, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: பிரிட்டன் தப்பியோடியுள்ள ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரியை இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு செல்வதற்கான அனுமதியை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வழங்கியது. கடந்த காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஆயுத இடை தரகராக இருந்தவர் சஞ்சய் பண்டாரி. இவர் மீது 2002ம் ஆண்டு பண மோசடி, வரி ஏய்ப்பு ஆகிய இரு வழக்குளை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை பதிவு
 ஆயுத தரகர், சஞ்சய் பண்டாரி,  நாடு கடத்தல், உள்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

புதுடில்லி: பிரிட்டன் தப்பியோடியுள்ள ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரியை இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு செல்வதற்கான அனுமதியை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வழங்கியது.

கடந்த காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஆயுத இடை தரகராக இருந்தவர் சஞ்சய் பண்டாரி. இவர் மீது 2002ம் ஆண்டு பண மோசடி, வரி ஏய்ப்பு ஆகிய இரு வழக்குளை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்திருந்தது.இதையடுத்து லண்டன் தப்பியோடினார் அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.


latest tamil news


இது தொடர்பாக 2020ம் ஆண்டு அப்போதைய பிரிட்டன் உள்துறை அமைச்சர் ப்ரீத்தி படேலுக்கு கடிதம் அமலாக்கத்துறை, எழுதியுள்ளது. லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கை கடந்தாண்டு நவம்பரில் நீதிபதி மிகைல் ஸ்னோ விசாரணை நடத்தி, சஞ்சய்ப பண்டாரி நாடு கடத்தப்பட வேண்டியவர் தான் என தெரிவித்துள்ளார். அடுத்த விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பிரி்ட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன், சஞ்சய் பண்டாரியை இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

Dharmavaan - Chennai,இந்தியா
18-ஜன-202308:00:28 IST Report Abuse
Dharmavaan பிரிட்டன் கோர்டுகளும் இந்திய கோர்ட் போல்தான்.இதற்க்கு இவ்வளவு வருடங்களா.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
18-ஜன-202306:31:24 IST Report Abuse
 N.Purushothaman இந்த சஞ்சய் பண்டாரி சோனியாவின் மருமகனான ராபர்ட் வாத்ராவின் மிக நெருங்கிய நண்பர் .... மத்திய பாதுகாப்புத்துறையில் உள்ள சில முக்கிய ஆவணங்கள் (கசிந்து )சஞ்சய் பண்டாரியின் வீட்டில் அசாதாரணமாக கிடந்தது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ....
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
18-ஜன-202302:14:36 IST Report Abuse
Kalyan Singapore இதேபோல் விஜய் மல்லய்யாவையும் நீரவ் மோடியையும் நாடு கடத்த அனுமதி வழங்கினால் , சுயெல்லா பிரேவர்மேன் அவர்கள் "இங்கிலாந்தில் அங்கீகாரமில்லாமல் குடியேறி வசிப்பவர்கள் அதிகம் உள்ள இனத்தவர்கள் இந்தியர்கள் தாம் " என்று சொல்லில் கூறினாலும், அவர் செயலில் இந்திய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பவர் என்று நிரூபணம் ஆகி விடும் Read more at: s://www.dinamalar.com/news_detail.asp?id=3220069
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X