திருவள்ளூர், திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஆண்டுக்கு இரு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த தினம் என்பதால் தை பிரம்மோற்வம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கொரோனா தொற்று நீங்கிய நிலையில், இந்த ஆண்டு பிரம்மோற்சவம், நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.முதல் நாளான நேற்று, தங்க சப்பரத்திலும், இரவு, சிம்ம வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவர் எழுந்தருளினார்.
இரண்டாம் நாளான நாளை காலை, ஹம்ஸ வாகனம், இரவு சூரிய பிரபை நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான, கருட சேவை, வரும் 19ம் தேதி, காலை 5:00 மணிக்கும், தேரோட்டம் வரும் 23ம் தேதியும் நடைபெற உள்ளது.