பெரியபட்டினம் : பெரியபட்டினம் அருகே வண்ணாங்குண்டு ஊராட்சி நாகநாத சமுத்திரம் கிராமத்தில் இருந்து கொல்லந்தோப்பு செல்லும் வழியில் இரு பக்கமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.
நாகநாத சமுத்திரம் கிராமம் வழியாக பெரியபட்டினம், முத்துப்பேட்டை, ரெகுநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் வழியாகும். இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர்.
ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் கிராம சாலை ஓரங்களில் வேலைக்காக பள்ளங்கள் தோண்டி அதனை பணித்திட்ட அறிக்கையாக சமர்ப்பிக்கின்றனர்.அதே வேளை சாலையோர சீமை கருவேல மரங்களை அகற்றுவதில்லை.ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.