திருத்தணி:திருத்தணி அடுத்த, லட்சுமாபுரம், சொட்டநத்தம் மற்றும் தாசிரெட்டிகண்டிகை ஆகிய மூன்று கிராமத்தில் இருந்து உற்சவர்கள், கொசஸ்தலை ஆற்றில் சங்கமிக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
அந்த வகையில், மூன்று கிராமங்களில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் ஆற்றில் எழுந்தருளினார்.
அப்போது, உற்சவர்கள் சந்திப்பின் போது, சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில், மேற்கண்ட கிராம மக்கள் மற்றும் திருத்தணி பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். பின், உற்சவர் அந்தந்த கிராமத்திற்கு சென்று வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.