சென்னை:கருவூலத் துறை கணக்கு அலுவலர் பதவிக்கு, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணியில் அடங்கிய, கணக்கு அலுவலர் நிலை - -3 பணியில், 23 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு அக்டோபரில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
இதில், தேர்ச்சி பெற்ற வர்களின் விபரங்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 25ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.