சென்னை, சென்னையில் உள்ள, அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில், நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
சென்னை, கிண்டி, ஆலந்துார் சாலையில், ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை, முகாம் நடக்கும்.
முகாமில், எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமா, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
முகாமில் 20க்கும் மேற்பட்ட, தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
இம்முகாம் வழியே பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு, ரத்து செய்யப்படாது.
வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் முகாமில் கலந்து கொள்ள, கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை.
முகாமில் பங்கேற்கும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள், தங்கள் விபரங்களை, தமிழ்நாடு தனியார் துறை வேலை வாய்ப்பு இணையதளத்தில், www.tnprivatejobs.tn.gov.in பதிவேற்றம் செய்ய வேண்டும் என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
Advertisement