சென்னை, தமிழக மின் வாரியத்தின் சென்னை விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள், பெரம்பூரில் மின் திருட்டு தொடர்பாக சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆறு மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மின் திருட்டில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து இழப்பீட்டு தொகையாக 7.82 லட்சம் ரூபாயை, அபராதமாக மின் வாரியம் வசூலித்தது. இதுதவிர அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு, குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து, அதற்குரிய சமரச தொகையாக கூடுதலாக 36 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தியுள்ளனர்.
மின் திருட்டு தொடர்பான தகவல்களை, 9445857591 என்ற மொபைல் போன் எண்ணில் தெரிவிக்கலாம்.