சென்னை, சென்னை, தரமணி, சி.எஸ்.ஐ.ஆர்., ரோட்டில் மின் வாரியத்திற்கு, 110 கிலோ வோல்ட் திறனில் 'டைடல் பார்க்' துணை மின் நிலையம் உள்ளது.
அந்த வளாகத்தில் உள்ள ஐ.டி., காரிடார் செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை 10:30 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
அதில் தரமணி, பெருங்குடி உள்ளிட்ட ராஜிவ் சாலையை ஒட்டிய ஐ.டி., காரிடார் பகுதியில் வசிக்கும் மக்கள் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து பயன் பெறலாம்.