சென்னை:தமிழகத்தில் , ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில் , 3,780 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், செங்கல்பட்டில் மூன்று பேர்; சென்னையில் இரண்டு பேர்; கன்னியாகுமரியில் ஒருவர் என, ஆறு பேருக்கு தொற்று உறுதியானது.
சிகிச்சை பெற்றவர்களில், நேற்று எட்டு பேர் குணமடைந்தனர். மருத்துவமனைகளில், 24 பேர் உட்பட, 53 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் இதுவரை, 24 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதில், 22 பேர் குணமடைந்த நிலையில், இரண்டு பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுகின்றனர்.