ராமர் சேது பாலம் நினைவு சின்னமா?: மத்திய அரசு பரிசீலனை

Updated : ஜன 19, 2023 | Added : ஜன 19, 2023 | கருத்துகள் (29) | |
Advertisement
புதுடில்லி: ராமர் சேது பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இதனையடுத்து சுப்பிரமணியன் சாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.தமிழகத்தின் பாம்பன்தீவில் இருந்து, நம் அண்டை நாடான இலங்கையின் வடமேற்கே உள்ள மன்னார் தீவு வரையில், கடலில் ராமர் சேது பாலம் அமைந்துள்ளதாக
supremecourt, ramarsethu, subramanianswamy,  ramarsethubridge, government, உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட், ராமர் சேது பாலம், மத்திய அரசு, சுப்பிரமணியன்சாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ராமர் சேது பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இதனையடுத்து சுப்பிரமணியன் சாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.


தமிழகத்தின் பாம்பன்தீவில் இருந்து, நம் அண்டை நாடான இலங்கையின் வடமேற்கே உள்ள மன்னார் தீவு வரையில், கடலில் ராமர் சேது பாலம் அமைந்துள்ளதாக ஹிந்துக்கள் நம்புகின்றனர். ராமாயண காலத்தில் இலங்கைக்கு செல்வதற்காக, ராமர் இந்தப் பாலத்தை கடலில் அமைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, கடல்வழி போக்குவரத்துக்காக இந்தப் பகுதியை ஆழப்படுத்தும் சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்டது. ஆனால், கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இத்திட்டம் கைவிடப்பட்டது.



latest tamil news

இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், 2007 ல் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், இத்திட்டத்தை செயல்படுத்த தடை விதித்தது.


இதைத் தொடர்ந்து, ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி, சுப்பிரமணியன் சாமி பொது நலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா அமர்வில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, ''கடந்தாண்டு டிச., ௧௨ல் பதில் மனு தாக்கல் செய்வதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை,'' என சாமி குறிப்பிட்டார். மேலும் அவகாசம் அளிக்கும்படி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேட்டார்.


இந்நிலையில், இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக கூறியுள்ளது.


இதனையடுத்து, சுப்பிரமணியன் சாமி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம், அரசின் முடிவு திருப்தி அளிக்காவிட்டால், மீண்டும் வழக்கு தொடர அனுமதி அளித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (29)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-ஜன-202318:58:45 IST Report Abuse
Natarajan Ramanathan கண்டிப்பாக மிக விரைவாகத் அறிவித்து இந்த சேது சமூத்திர திட்டத்துக்கு நிரந்தர மூடுவிழா நடத்த வேண்டும்...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-ஜன-202316:57:28 IST Report Abuse
J.V. Iyer உடனே செய்யுங்கள்.
Rate this:
Cancel
Kanagaraj M - Pune,இந்தியா
19-ஜன-202316:44:10 IST Report Abuse
Kanagaraj M இராமாயணத்தில் பல உள்ளன. குறிப்பிட்ட காலம் வரை அதை கற்பனை கதையாகவும், அடுத்த காலத்தில் உண்மை கதையாகவும் சித்தரிக்கப்பட்டு இருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X