காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஜனவரி மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம், ஜன., 27ம் தேதி காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் வல்லுனர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்று வேளாண் அறிவுரைகள் மற்றும் விளக்கங்கள் அளிக்க உள்ளனர்.
எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, வேளாண் தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.